
அன்று(12/04/2010)காலை அப்பா வந்து ஐயா எங்களை விட்டு போய்விட்டார்
என்று சொன்னதும்
என் செவி வழி கேட்டதைக் கூட என்னால் நம்ப முடியவில்லை...
இது கனவாக இருக்க கூடாத என என் மனம் ஏங்கியது....
அம்மாவும் மாமாவும் யாழ்ப்பாணம் போக வேண்டாம் என்று கூறிய போதும்
வழமை போல் என் விருப்பம் நிறைவேற வேண்டும் என்று
என்னை செல்ல வேண்டாம் என்று கூறாது
கவனமாக போய் வா என கூறி என்னை
அன்பாய் கட்டித் தழுவி அனுப்பி வைத்தது
இப்பிடி ஒரு வார்த்தை கூட சொல்லாமல்
எம்மைத் தவிக்க விட்டு போவதற்கா?
பிறந்தது முதல் இன்றுவரை எமக்கு எது தேவை என்று
நாம் கேட்கும் முன்னமே எமக்கு எல்லாம் செய்தீங்கள்...
நாம் பள்ளி செல்லும் போது மகிழ்ந்தீங்கள்
பட்டம் பெற்று வேலை செல்லும் போது
பார்த்து ரசித்தீங்கள்....
புது வேலை கிடைத்து விட்டதும் மிக்க மகிழ்ந்தீங்கள்
"எப்ப புது வேலைக்கு போக போறாய்?"
என்று தினம் தினம் கேட்டீர்கள்
ஆனால் இன்று வேலைக்கு செல்லும் போது
பார்த்து மகிழ நீங்கள் இல்லையே ஐயா
தினமும் நான் வேலைக்கு போகும் போது
வாசலருகில் இருந்து "சப்பாடு எல்லாம் எடுத்தாயா?"
என்டு கேட்டு வழியனுப்பி வைப்பீங்களே
இன்று நான் உங்கள் படத்தை வணங்கி விட்டு போறன் ஐயா
நான் இந்த மண்ணில் வந்துதித்த நாள் முதல்
எங்களுடன் பாசமாய் எங்களை அரவணைத்து இருந்து விட்டு
இப்ப இப்பிடி விட்டுட்டு போக உங்களுக்கு எப்பிடி ஐயா மனசு வந்தது...
உங்கட பாசத்தில எப்பவும் வளர்ந்த நாங்கள் இன்று தவித்து போய்ட்டம் ஐயா
எங்கள விட்டு போய் ஒரு மாசம் ஆகிட்டய்யா...
இனி நாங்க யாரை போய் ஐயா ஐயா என்று கூப்பிடுறது?
அபி அபி என்டு நீங்க பாசமா எப்பவும் கூப்பிடுறது
இன்னும் என் காதுகளில் ஒலிக்குது ஐயா
எங்களுக்கு நல்ல தாத்தாவாய் ஒரு நண்பனாய்
ஒரு தந்தையை போல இருந்தீங்க ,,,
இனி என்றும் எங்களுடன் இருப்பது
நீங்கள் எங்களுடன் இருந்த நாட்களின் பசுமையான நினைவுகளே....
ஐயா, நீங்கள் எங்களை விட்டு போனாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் உயிர் உள்ளவரை
எங்களுடன் அழியாமல் இருக்கும்....
மீண்டும் எங்களுக்கு பிறப்பு இருக்குமானல்
நீங்கள் அவ் ஒவ்வொரு பிறப்பிலும்
எங்கள் ஐயாவாக வர வேண்டும்......
உங்கள் ஆத்மா சாந்திக்காக நாங்கள்
எப்போதும் இறைவனை வேண்டி நிற்போம்.....
