
ஐயா!
நேற்று போல் உள்ளது... ஆனால்
ஆண்டு ஒன்று சென்றுவிட்டது
நீங்கள் எங்களை விட்டுச் சென்று
உங்கள் அன்பு செல்வங்கள்
இன்று நீங்கள் இன்றி
தவித்து நிற்கின்றோம் ஐயா
அன்பாக நீங்கள் எங்களை
பாசமாக கூப்பிடுவது இன்னும்
தேனாய் எம் காதில் ஒலிக்கின்றது
இனி எப்போது உங்களை
நாம் காணுவோம் ஐயா
தவித்து நிற்கின்றோம் நாம்
உங்கள் பேரக் குழந்தைகள்
உங்கள் பாச செல்வங்கள்
என்றும் உம்மை மறவோம்
எமக்கு நல்ல ஒரு தாத்தாவை
தந்தையாய் நண்பனாய் ஆசானாய்
வழிகாட்டியாக நீங்கள் இருந்தீர்கள்
நீங்கள் எங்கள் மேல் கொண்ட
அன்பு போல நாங்கள் உங்கள் மேல்
கொண்ட அன்பும் என்றும் மாறது
இன்றும் நீங்கள் எங்களுடன்
இல்லை என்று
எங்களால் நம்ப முடியவில்லை
எங்களை விட்டு இறைவன் திருவடி
தேடிச் சென்ற நீங்கள் அங்கு
ஆத்மா சாந்தி அடைவீர்களாக!!!!!
No comments:
Post a Comment